சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஒத்தக்கடை திருச்சி துறையூர் சாலையில் விபத்தில் காயமடைந்த பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்
மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் திருவெள்ளரை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அவர் இன்று காலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்ற போது துறையூர் சாலையில் ஒத்தக்கடை என்ற இடத்தில் மற்றொரு இரு சக்கர வாகனம் விஜயலட்சுமி ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆசிரியை விஜயலட்சுமி சாலையில் கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது அவ்வழியாக உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி காயம் அடைந்த பள்ளி ஆசிரியை உடனடியாக தனது காரில் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தனது ஆய்வு பணிக்கு புறப்பட்டு சென்றார். தலைமை ஆசிரியரை மாவட்ட ஆட்சியர் மீட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.