விழுப்புரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பாளர்கள் காலை முதல் திமுக அதிமுக என இரு கட்சியினரும் வேட்பாளருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அப்பொழுது கூட இரு கட்சியினரை சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர். இந்நிலையில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் பாஜக கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 20 பெயர்களுக்கு மேல் உள்ளே வந்தனர்.
அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் கூட ஒரு சிலர் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு உள்ளே சென்றனர். இதனை பார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தேர்தல் விதி முறையின்படி ஐந்து பேருக்கு மேல் மனு கொடுக்க உள்ளே அனுமதி இல்லை என தெரிவித்தார்
இருப்பினும் பாஜகவினர் வெளியே காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதனிடையே பாமக வேட்பாளர் முரளி சங்கர் பாஜக மாவட்ட தலைவரிடமும் மாநில துணைச் செயலாளர் இடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின்னர் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் அளித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.