பழனியில் அரசு பேருந்தில் புகைப்பிடித்த படி படியில் நின்ற பேருந்து நடத்துனர் குறித்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து விதிகள் பொதுமக்களுக்கு மட்டும்தானா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பழனியில் இருந்து தேனிக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து கிளம்பிச் சென்றது. பழனி நகரில் இருந்து புறநகர் பகுதிக்கு பேருந்து சென்ற நிலையில், பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத நிலையில், பேருந்தின் பின்புற படிக்கட்டில் நின்று கொண்டு பேருந்து நடத்துனர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.
இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மோட்டார் வாகன சட்ட விதிகள் இதுபோல் பணியில் உள்ளபோக்குவரத்து ஊழியர்களுக்கு பொருந்தாதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பணியின் போது பேருந்தில் புகை பிடித்த நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.