கேள்வி கேட்ட கவுன்சிலர்… மேடையில் இறங்கி ஓடி வந்து தாக்கிய எம்எல்ஏ : திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு!
சென்னை திருவெற்றியூரில் மேற்கு பகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் திமுக மாமன்ற உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவெற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் பேசிக் கொண்டிருந்தபோது திமுக மாமன்ற உறுப்பினர் சிவக்குமார் திமுக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்குவதில்லை என குற்றம் சாட்டினார்.
எம்எல்ஏ நிதி ஒதுக்காததால் தனது வார்டில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அனைவரும் முன்னிலையிலும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய அவர், எதுவாக இருந்தாலும் முறைப்படி கோரிக்கை மனு அளிக்கவேண்டும், தொகுதி வளர்ச்சி குறித்து பேசுவதற்கான இடம் இது இல்லை எனவும், பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலையிட்டு பதில் அளித்தார்.
இதனால் திமுக எம்எல்ஏவுக்கும் திமுக மாமன்ற உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.