சென்னையில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய தம்பதி.. கொள்ளிடம் பாலத்தில் இருந்து பாய்ந்த கார்.. சுக்குநூறாக சிதறிய சடலங்கள்!
கேரள மாநிலம் இடுக்கியை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் நேற்று இரவு சென்னையில் இருந்து கேரளாவுக்கு காரில் புறப்பட்டார். இன்று அதிகாலை இவர்களது கார் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் வந்த போது கார் அவரது கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் கார் நொறுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவல் அறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் உடனடியாக சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரை ஓட்டிய ஸ்ரீநாத் கண் அயர்ந்து விட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
This website uses cookies.