Categories: தமிழகம்

ஏம்பா குடிக்கற..இனி குடிக்காத பா : அறிவுரை கூறிய மகள்களை கொன்று சடலம் அருகே அமர்ந்து மது அருந்திய கொடூரத் தந்தை.. ஷாக் சம்பவம்!!

மதுகுடிக்காதே என தகப்பனிடம் கூறிய 2 பிள்ளைகளையும் தந்தையே கட்டையால் அடித்து கொன்ற கொடூரமான செயல் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகுகிறது. இந்த தம்பதிகளுக்கு நந்தினி (வயது 16) ,நதியா (வயது 14), தீனா வயது 11, தீபா (வயது 9) என்ற 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

கோவிந்தராஜனின் மனைவி ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள குடோனில் குப்பை பிரிக்கும் வேலை செய்து வருகிறார். கோவிந்தராஜ் கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி அவ்வப்போது தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார் என கூறப்படுகிறது.

இதில் கோவிந்தராஜன் இரண்டாம் மகள் நதியா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு இறந்துவிட்டார். நதியா எப்படி இறந்தார் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஒரகடம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

மூத்த மகள் நந்தினி வாலாஜாபாத் மாசிலாமணி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வாரணாசி அருகே உள்ள தாழம்பட்டு அரசு பள்ளியில் தீனா 6 வது வகுப்பும், தீபா 4ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரகடம் டாஸ்மாக்கில் மது வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் மது அருந்திக் கொண்டிருந்த போது, பள்ளியிலிருந்து வந்த இரண்டு மகள்களும் யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு மது குடித்துக் கொண்டிருந்த தன் தந்தையிடம் ஏன் மது குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கின்றாய் என சத்தம் போட்டுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த கோவிந்தராஜ் அருகே இருந்த ரிப்பர் கட்டையை எடுத்து தன்னுடைய இரண்டு மகள்களையும் தலையிலும் மார்பிலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த நந்தினியும் தீபாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்கள். மகள்களை அடித்து கொன்று விட்டு வீட்டினுள் உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு மீதி மதுவை கோவிந்தராஜ் அருந்திக் கொண்டிருந்தார்.

மகன் தீனா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள் தாழ்ப்பாள் போட்டு உள்ள படியால் தனது பாட்டி அம்பிகாவையும் பக்கத்து வீட்டில் உள்ள கோபால் என்பவரையும் அழைத்து என்ன ஏது என கேட்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து கதவை தட்டியபோது, கதவை திறந்துகொண்டு கோவிந்தராஜ் தப்பி ஓடி ஓரகடம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தகவலை அறிந்து வந்த ஒரகடம் காவல்துறையினர் நந்தினி மற்றும் தீபாவின் உடல்களை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கோவிந்தராஜிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

மதுவுக்கு அடிமையான கோவிந்தராஜ் தன் மகள்கள் என்றும் பாராமல் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மண்ணெண்ணெய் ஊற்றி இறந்துபோன நதியா என்ற மகளையும் கோவிந்தராஜ் தான் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகமும் அவருடைய உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

6 hours ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

7 hours ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

7 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

8 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

8 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

9 hours ago

This website uses cookies.