செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். கட்டடத் தொழிலாளியான இவருக்கு ரக்சயா (வயது 20), என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
சிறு வயது முதலே அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தியுள்ளார் ரக்சயா.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் Forever Star India Awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகினார்.
பின்னர் மாநில அளவிலான போட்டி, இந்த மாதம் ஜெய்ப்பூரில் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான ரக்சயா, ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதைப் போன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
மேலும் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ’மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிய அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர்.
இதில் தேர்வாகும் நபர் ’மிஸ் இந்தியா’ பட்டத்தை வெல்வார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ’மிஸ் இந்தியா’ பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ரக்சயா.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.