திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (60). இவரது மனைவி அமலோற்பவமேரி (48). தம்பதியருக்கு மகன் சார்லஸ். இவர் பனியன் நிறுவனம் நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் ரூ. 15 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
சார்லஸிடம் கடன் கொடுத்தவர்கள், பணம் கேட்க அவர் திருப்பூர் மாநகரின் வேறு பகுதியில் குடியேறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சார்லஸிடம் பணம் கொடுத்தவர்கள் அவர்களது பெற்றோரிடம் பணம் கேட்டு நச்சரிக்கவே, இருவரும் ஒருகட்டத்தில் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில் தம்பதியர் விஷம் அருந்தியதாக தெரிகிறது. இதனை அலைபேசி வழியாக மகனுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஷம் அருந்திய நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதில் அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமலோற்பவமேரி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரும் உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.