Categories: தமிழகம்

தீர்ப்பு வெளியான பின் இபிஎஸ் எடுத்த முடிவு… உடனே பறந்த அதிரடி உத்தரவு : உற்சாகத்தில் அதிமுக!!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி நாடு முழுவதும் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் மாதம் 5,6,7 மற்றும் 10,11,12 ஆகிய 6 நாட்கள், ‘இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
மார்ச் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மார்ச் மாதம் 10,11,12 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன் படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 5 ஆம் தேதி சென்னை ஆர்கே நகர் பகுதியில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூரிலும்,தங்கமணி குமாரபாளையத்திலும், உரையாற்ற உள்ளனர்.

7 ஆம் தேதி வேலூரில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனும், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வதாந்தனும், ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போலமார்ச் 5,6,7 ஆம் தேதி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

9 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

10 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

11 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

11 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

12 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

13 hours ago

This website uses cookies.