கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற போது கோவில் வாசலில் தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை எடுத்துச் செல்லுமாறு கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது !
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18ஆம் தேதி சாகை வார்த்தை நிகழ்ச்சியுடன் தொடங்கி அடுத்த மாதம் இரண்டாம் தேதி தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் அதற்க்கு அடுத்த நாள் திருத்தேர் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதனையெட்டி திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக கோவிலுக்கு வருகை தந்தார்.
அப்பொழுது கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை அழைத்து எடுத்துச் செல்லுமாறு கூறினார்.
அதனை தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் எடுத்துச் சென்றார். இந்த சம்பவதை பார்த்த ஆய்வுக்காக காத்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் கோவை மாநகராட்சியின் ஆணையராக பணிபுரிந்து வந்த அவர் கனியாமூர் கலவரத்திற்குப் பிறகு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.