கஞ்சா பற்றி நகராட்சி கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர்.. அடுத்த நொடியே எழுந்து நன்றி கூறிய அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு.!!
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் விழுப்புரம் நகரத்தில் உள்ள 42 வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டு விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் மின்விளக்கு , சாலை அமைக்கும் பணி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினர்.
அப்பொழுது 36-வது வார்டு திமுக கவுன்சிலர் மணவாளன் எங்கள் பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் கஞ்சா மற்றும் குடித்துவிட்டு இளைஞர்கள் அட்டகாசம் செய்வதாக கூறினார்.
உடனே அதிமுக பெண் கவுன்சிலர் ராதிகா செந்தில்குமார் திமுக கவுன்சிலர் இந்த விழுப்புரம் நகரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவு இருக்கிறது என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
உடனே திமுக கவுன்சிலர்கள் எழுந்து அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தெரு விளக்கு போடுவதற்கு டெண்டர் எடுத்த நபரிடம் கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்வி கேட்டனர் இதற்கு டெண்டர் எடுத்தவர் இதையெல்லாம் இங்கே பேசக்கூடாது என்று கூறியதால் திமுக கவுன்சிலர்கள் கோபமடைந்து மிரட்டியபடி இவருடைய டெண்டரை நிறுத்துமாறு கூறி நகர மன்ற தலைவி தமிழ்ச்செல்வி இடம் கோரிக்கை வைத்தனர். இதனால் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.