நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த இருந்த ஐந்து ஏக்கர் கரும்பை வெட்டி திருடி சென்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 100 மேற்பட்டோர் மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிருத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சுத்தமலை கிராமத்தை சேர்ந்தவர் எலிசபெத் ராணி. இவருக்கு சொந்தமான சுத்தமலை கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தனர்.
ஐந்து ஏக்கர் கரும்பை மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்தக் கரும்பை ஈருடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் இரட்சகர் என்பவர் வெட்டி திருடி சென்று விட்டதாகவும் அங்கிருந்த மோட்டார் பம்பு செட்டு உள்ளிட்வை எடுத்துவிட்டு சென்றதாகவும் கூறி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆளுங்கட்சி பிரமுருக்கு எதிராக போராட்டம் நடத்தியது அம்மாவட்ட அரசியல் பிரமுகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.