சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சந்திராயன் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. இனி உலக நாடுகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்திரயான் வெற்றி அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. பல நிறுவனங்கள் இதற்கு உதவி செய்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
மத்திய அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், CAG – திமுக, அதிமுக ஆட்சியில் கூட அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
ரயில்வே துறையில் திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக செலவாகி இருப்பதை (Cost over) தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது அனைத்து மாநில அரசுக்கும் இதுபோன்று cost over இருக்கும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கம் அளிப்போம் என தெரிவித்தார்.
தமிழக அரசு கூட விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்து இருக்கிறார்கள். மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் மாநில அரசு விளம்பரத்திற்காக செலவு செய்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.
அமைச்சர்கள் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆ ர் ராமசந்திரன் தங்களுடைய பதவியை தவறாக பயன்படுத்துகின்றனர். கீழமை நீதிமன்றம் வேறு நபர்கள் சொல்லி இருக்கும் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர்.
நீதிமன்றத்திலும் திமுக தலையீடு இருக்கிறது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் இருக்கும் ஊழல் அரசு போல் வேறு எங்கும் இல்லை.
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையை கலைக்க வேண்டும். மேலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்பாக அமலாக்கதுறை மனு போட்டு இருக்கிறது. இன்னும் அடுத்து அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு வரும் என தெரிவித்தவர், இது தொடர்பாக செய்திகளின் அடிப்படையில் தான் பேசுவதாக கூறினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.