பொற்கிழி பெற வந்த திமுக பெண் நிர்வாகிகள் அவமதிப்பு.. தரையில் அமரவைத்து சமூகநீதியை காற்றில் பறக்க விட்ட அவலம்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன் பட்டியில் கட்சிக்காக உழைத்த 1500 திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது.
இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 20 நிர்வாகிகளுக்கு மட்டும் மேடையில் பொற்கிழி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு விருது பெறுவதற்காக அழைத்து வரப்பட்ட திமுக மூத்த பெண் நிர்வாகிகள் விழா மேடையின் முன்பு நிகழ்ச்சி முடியும் வரை தரையில் அமர வைக்கப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்தனர். யாருக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதோ அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் தரையில் அமரவைத்து மரியாதை செய்தது இதுதான் திராவிட மாடல் மரியாதையோ என்று உண்மையான கட்சிக்காரர்கள் மனதுக்குள் புலம்பிச்சென்றனர்.
மேலும் கூட்டம் முடிவதற்குள் கூட்டத்திற்கு வந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த கரும்புகளை எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டினர். மேலும் திமுக கட்சி நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் குப்பை அள்ளும் வாகனங்களையும் இந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.