ஓட்டுநருக்கு திடீர் ரத்தக் கொதிப்பு.. நிலை தடுமாறி சாலையோர கடைக்குள் புகுந்த ஆட்டோ.. ஷாக் சிசிடிவி காட்சி!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி பஜார் எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய பகுதியாகும்.
திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் சாலையில் உள்ள இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்வீட் கடை முன்பு வழக்கமாக பரபரப்பாக இருந்துள்ளது.அப்போது திருச்செந்தூரில் இருந்து ஆட்டோ ஒன்று வேகமாக வந்து கடையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
மேலும் படிக்க: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் மனைவிக்கு வந்த போன் கால்.. காத்திருந்த ஷாக் : சைபர் கிரைம் விசாரணை!
ஆட்டோ ஓட்டுனர் வாகனத்தை ஓட்டி வரும்பொழுது திடீரென அவருக்கு ரத்த கொதிப்பு அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் வந்த வேகத்தில் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கடையில் நின்று கொண்டிருந்த மூன்று பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் ஸ்வீட் கடையின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் சேதமறைந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதால் கடை உரிமையாளர் மற்றும் காயமடைந்தவர்கள் புகார் கொடுக்காததால் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு ஏதும் செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடை முன் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்து ஆட்டோ மோதும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.