சென்னை பூவிருந்தவல்லி அடுத்த பாரிவாக்கத்தில் தனியார் கார்கோ நிறுவனம் உள்ளது.
இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து உதிரிபாகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேற பகுதிக்கு டெலிவரி எடுத்து செல்வது வழக்கம் அந்த வகையில் இரவு சென்னை எர்ணாவூரை சேர்ந்த எழில்ராஜ் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பொருட்களை இரக்க நிறுத்தத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர் சரக்குகளை இறக்கி வைத்துள்ளார்.
பின்னர் மீண்டும் வாகனத்தை வெளியே எடுப்பதற்காக ஸ்டார்ட் செய்துவிட்டு அருகே உள்ள வாகனத்தில் இந்த வாகனம் இடித்துவிட போகிறது என்பதற்காக கீழே இறங்கி பார்த்துள்ளார்.
அப்போது திடீரென வாகனம் முன்னாள் சென்று அருகே இருந்த மற்றொரு வாகனத்தில் முட்டி நின்றது. இதில் எழில்ராஜ் தான் ஓட்டி வந்த சரக்கு லாரியின் கதவில் சிக்கிக்கொண்டது இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
எழில்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு எழில்ராஜ் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.இந்த சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் எழில்ராஜிற்கு திருமணமாகி ஒராண்டு ஆன நிலையில் அவர் உயிர் இழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.