Categories: தமிழகம்

மாணவர்கள் திட்டியதால் நடுரோட்டில் அரசு பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர் : விழுப்புரத்தில் பரபரப்பு!!

மாணவர்கள் திட்டியதால் நடுரோட்டில் அரசு பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிய ஓட்டுநர் : விழுப்புரத்தில் பரபரப்பு!!

விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்ரோடு வரை செல்லும் அரசு பேருந்து காலை மற்றும் மாலை வேளையில் மாணவர்கள் நலன் கருதி சென்ற ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் மோகன் மாணவர்களுக்கு மட்டும் இயங்கும் பேருந்து என்று பள்ளி சென்று வரும் நேரங்களில் இந்த பேருந்தை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இவ்வளவு நாட்கள் மாணவர்கள் மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டியபடி பேருந்து இயக்கப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மாறியதால் இந்த பேருந்தை கோலியனூர் கூட்ரோடு வரை செல்லும் பொதுமக்கள் சென்றுவரும் அரசு பேருந்தாகவே மாற்றப்பட்டது.

இந்நிலையில் கோலியனூர் கூட் ரோட்டில் இருந்து நேற்று காலை வந்த இந்த அரசு பேருந்து ராகவன்பேட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தவர்களை ஏற்றாமல் வந்ததாக கூறி இன்று வந்த அரசு பேருந்தில் ஏறி மாணவர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் கம்பன் நகர் பகுதியில் சாலையிலேயே பேருந்தை இயக்காமல் நிறுத்தி பேருந்தில் இருந்து இறங்கி வந்து ஓரமாக அமர்ந்து விட்டார்.

பின்னர் அதில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏறி சென்று விட்டனர். ஆனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவர் நேற்று நான் பேருந்த இயக்கவில்லை என்று கூறிய பின்னர் தான் மாணவர்கள் அமைதி அடைந்தனர். பின்னர் அரசு பேருந்து அங்கிருந்து மாணவர்களுடன் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

6 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

7 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

7 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

8 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

8 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

8 hours ago