கோவை : நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ஓட்டுநரான இவர் தன் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு ஆஜராக நேற்று கோவை கோர்ட் வளாகத்துக்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முன்பு சத்தம் போட்டு ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார்.
இதனைப்பார்த்த கோர்ட் ஊழியர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் குடிபோதையில் சத்தமிட்டு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு கோர்ட்டில் நடைபெறும் பணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற மாண்புகளை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பொது அமைதியை சீர்குலைத்தல், நீதிமன்ற அவமதிப்பு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். பின்னர் நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.