கோவை : மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் ஒற்றை ஆண் காட்டுயானை கிராமத்தினுள் நுழைந்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதை பார்த்து மக்கள் அச்சமடைந்தனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் தற்போது கோடையின் வெப்பம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி துவங்க ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக வன உயிரினங்களான காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு தற்போதே வெளியேறி வருகின்றன. அந்த வகையில் மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் நேற்று இரவு 9மணி அளவில் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை கிராமத்திற்குள் புகுந்தது அங்குள்ள கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற யானையை பார்த்த தெருநாய் குரைத்த நிலையில் காட்டுயானை அந்த நாயை மிகுந்த ஆக்ரோசமாக துரத்தியது.
இதனை கண்ட மக்கள் வீட்டினுள் சென்று விட அந்த யானை அங்கிருந்து நகர்ந்து கல்லார் வனப்பகுதிக்குள் சென்றது. இரவு 9 மணிக்கு காட்டு யானை சாலை நடந்து வந்ததை பார்த்து அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.