Categories: தமிழகம்

இந்தியாவிற்கே பெருமை சேர்த்த ஆவணப்படம்… அளவில்லா மகிழ்ச்சி : The Elephant Whisperers-ல் நடித்த யானை பாகன் உருக்கம்..!!

இந்தியாவிற்கே பெருமை சேர்த்த யானை குறும்படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி அளிப்பதாக The Elephant Whisperers ஆவணக் குறும்படத்தில் யானை பாகன் பொம்மா உருக்கமாக பேசியுள்ளார்.

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிகள் குறித்த இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கான்சால்வேஸ், தயாரிப்பாளர் குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், ஆஸ்கர் விருது பெற்றது தொடர்பாக he Elephant Whisperers ஆவணக் குறும்படத்தில் யானை பாகன் பொம்மா உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது :- கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் தாயை இழந்த ஆண் குட்டி யானை ரகு பலத்த காயங்களுடன் இருந்தது. அதனை முதுமலை வன விலங்கு சரணாலயத்திற்க்கு எடுத்து வந்து வளர்த்து வந்தேன். அதன் பின்னர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டில் தாயை இழந்த பெண் குட்டியானை பொம்பி வந்தது.

இரண்டு குட்டிகளையும் என் ஒருவனால் பராமரிக்க முடியாது என்பதால் உதவிக்கு அதே ஊரை சேர்ந்த பெல்லி என்ற பெண்ணின் உதவியுடன் இருவரும் சேர்த்து 2 குட்டி யானைகளையும் பராமரித்தோம். அப்போது, தாயை பிரிந்த குட்டி யானைகளை பற்றி தி எலிஃபான்ட் விஸ்பரஸ் என்ற ஆவணக் குறும்படம் எடுப்பதாக இயக்குநர் கார்த்திகா கோன்சாகி என்னிடம் தெரிவித்தார். மேலும், அதில் நாங்கள் இருவரும் கணவன் – மனைவி கதாபாத்திரங்களில் நடிக்க கேட்டுக் கொண்டார்.

நான் நீலகிரி மாவட்ட முதுமலை வன விலங்கு காப்பகத்தில் யானைகளை பராமரிக்கும் ஊழியராக உள்ளேன். நான் நடித்த இந்த படத்திற்க்கு ஆஸ்கர் விருது கிடைத்து மகிழ்ச்சியாக உள்ளது, என தெரிவித்தார்.

தாயை பிரிந்த யானை குட்டிகளை பராமரித்து வருவதும், தாயை இழந்த குட்டி யானையையுடன் எவ்வாறு பழகுவது, காட்டில் இருக்கும் போதும், தாயுடன் இருக்கும் போதும் யானையின் சுபாவம் எப்படி இருக்கும். அதேவேளையில் தாயையும், காட்டையும் பிரிந்து மனிதர்களிடையே எவ்வாறு பழகும் என்பதை இந்த ஆவணப் படம் வாயிலாக இயக்குநர் அழகாக படமாக்கி உள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பத்திரிகையோடு நடிகர் விஷால்… விரைவில் திருமணம் : நல்ல நேரம் ஸ்டார்ட்..!!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…

19 minutes ago

இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…

15 hours ago

எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

16 hours ago

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த மணப்பெண்ணின் உல்லாச வீடியோ… அதிர்ந்து போன இருவீட்டார்!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…

16 hours ago

கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?

வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…

17 hours ago

கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…

18 hours ago

This website uses cookies.