விழுப்புரம்: நடந்து முடிந்து உள்ளாட்சி தேர்தலில் தோற்றுப்போன வேட்பாளர் ஒருவர் மக்களுக்கு காலில் விழுந்து நன்றி தெரிவித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பேண்ட் மேளங்கள் இசைக்க வாக்களித்த பொதுமக்களுக்கு வீதி வீதியாக வந்து நன்றி தெரிவிப்பது வழக்கம். ஆனால் விழுப்புரத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் நகராட்சி 41வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக கிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சாந்தா ராஜ் என்பவரிடம் வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இருப்பினும் தனக்கு ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் நகர், அன்னை தெரேசா நகர் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பெரியவர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்து ஆசி பெற்றார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.