சிவகங்கை மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (32) என்பவர் மீது சிப்காட் , திருப்பாச்சேத்தி இளையான்குடி , பூவந்தி, மற்றும் சிவகங்கை ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ரவுடியான அழகுபாண்டி குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைமறைவாகி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இதனிடையே திருப்பாச்சேத்தி காவல் நிலைய வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக மதுரைக்கு வந்துள்ளார்.
இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் அழகுபாண்டியின் மனைவி வீட்டில் அழகுபாண்டி தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்த 5பேர் கொண்ட கும்பலானது அழகுபாண்டியை சரமாரியாக அரிவாள், வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சராமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலயே அழகுபாண்டி உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஒத்தக்கடை காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் கொலை சம்பவம்தொடர்பாக மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.