திருப்பூர் : பல்லடத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் சட்டவிதிகளை மீறி இயங்கும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 7-வது நாளாக விவசாயி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்திற்க 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கல்குவாரியை மூடக்கோரி விவசாயி விஜயகுமார் என்பவர் தனி ஒருவராக ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
விவசாயிக்கு ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்து கல்குவாரிக்குள் குதித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றதில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனால் விவசாயிகள் கல்குவாரிக்குள் குதித்து போராட்டத்தில் ஈடுபட, உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் பகுதியில் இருந்து கல்குவாரியை நோக்கி புறப்பட்டபோது, போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் கல்குவாரிக்கு நுழைய முற்பட்டபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்குவாரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட விவசாயிகள் 100 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்த கல்குவாரியை மூடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.