கோவை பேரூர் கோவிலுக்கு திதி கொடுக்க வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் உறவினர்கள் கண் முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (வயது 55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார்.
இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனலட்சுமியின் அக்கா காலமானார்.
அவருக்கு திதி கொடுப்பதற்காக நாராயணசாமி, தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் வேனில் இன்று காலை கோவை வந்தனர். முன்னதாக பேரூர் படித்துறை திதி கொடுத்துவிட்டு, பேரூர் பட்டீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
பின்னர் காலபைரவர் சன்னதியில் தரிசனம் செய்த போது நாராயணசாமி திடிரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலென்ஸ் தகவல் தெரிவித்தனர்.
அதில் வந்த அவசரகால மருத்துவர் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதைகேட்டு கதறி அழுத உறவினர்களால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து பேரூர் கிராம நிர்வாக அலுவலர், பேரூர் போலீசார் விசாரணைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததால் பேரூர் கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் வாஸ்து சாந்தி செய்து நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்தது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.