உதகை எல்ஹில் பகுதியை சேர்ந்தவர் மோகன்(46) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷோபா(38) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகள் உதகையில் உள்ள தனியார் கல்லூரியிலும், மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தம்பதியிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எல்க்ஹில் பகுதியில் உள்ள மோகனுக்கு சொந்தமான வீட்டில் ஷோபா தனது குழந்தைகள் மற்றும் கணவரின் சகோதரி, தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
மோகன் மட்டும் முத்தோரை பகுதியில் தனியாக வசித்து வந்தார். ஷோபா ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே சமாதானம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஒரு மாத காலமாக மோகன் தனது குடும்பத்தினருடன் எல்க்ஹில் பகுதியில் சேர்ந்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் எல்க்ஹில் வீட்டில் வசித்து வந்த மோகனின் சகோதரியை, அவர் திருமணமான வீட்டுக்கு சென்று வாழுமாறும், இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்றும் ஷோபா கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் மோகன் மற்றும் ஷோபா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மோகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ஷோபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து மோகன் உதகை நகர மத்திய போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஷோபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரணடைந்த மோகன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவர், மனைவியை கொலை செய்த சம்பவம் உதகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.