தமிழகம்

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், வன்னியர் சங்கம் 1980ல் தொடங்கிய காலத்தில் வாரம் முழுவதும் மருத்துவ சேவையாற்றிய தான் சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.

இதையும் படியுங்க: பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

இனிமே பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பினை தானே எடுத்து கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமனம் செய்துள்ளார்.

அன்புமணியை பதவி நீக்கம் செய்த காரணத் கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன் என பேசும் போது, பாஜகவுடன் கூட்டணியா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன், நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்து கூறுகிறேன் என தெரிவித்தார்.

ராமதாஸ் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியது அக்கட்சியினரிடையே அதிருப்தியை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பாமக பொதுக்குழு கூட்டத்தின் போது ஒரே மேடையில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

அப்போது பாமக இளைரணித் தலைவராக ராமதாஸ் தனது சகோதரி மகன் முகுந்தனை அறிவித்த போது, மேடையிலேயே எதிர்த்து பேசியிருந்தார் அன்புமணி,.

இந்த நிலையில் ராமதாஸ் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக முதல் குரலாக பாமக பொருளாளர் திலகபாமா பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் பாமகவின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த முடிவு சரியே, அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான்.. ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம். அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்.

நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், தனி நபர்களை விட தலைமை பெரியது, தலைமையை விட இயக்கம் பெரியது, இயக்கத்தை விட சமூகம் பெரியது . சமூக நலன் காக்கப்பட வேண்டுமென்றால் அது அன்புமணி தலைமையில் மட்டுமே, டாக்டர் அன்புமணி வழியில் நாம் என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

6 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

7 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

8 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

8 hours ago

This website uses cookies.