கோவை, அருகே சின்னியம் பாளையத்தில் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு இளம் பெண்ணுடன் வாலிபரும் வந்து தங்கினார்.
பின்னர் நேற்று அதிகாலை வாலிபர் மட்டும் வேகமாக விடுதியை காலி செய்து விட்டு வெளியேறிவதை கண்டு விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தார்கள்.
இதனால் அந்த அறைக்கு சென்று எட்டிப் பார்த்தனர். அங்கு அவருடன் தங்கி இருந்த இளம் பெண் முகத்தில் காயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கு விடுதி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பீளமேடு காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூரை சேர்ந்த சரவணன் என தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் விடுதியில் இறந்து கிடந்த பெண் கோவை எஸ்.எஸ் குளம் அருகே கள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா என்பதும் கோவை அவிநாசி சாலையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்து ஜிம்மில் பயிற்சியாளராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
கீதாவும் சரவணனும், காதலித்து வந்து உள்ளனர். வீட்டுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு உள்ளனர். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை கீதாவும், சரவணனும் அண்ணன் தங்கை உறவுமுறை என தெரிகிறது.
மேலும் படிக்க: எந்த விதத்திலும் உதவி செய்யாத முதலமைச்சர் ஸ்டாலினை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ; வானதி சீனிவாசன் ஆவேசம்!
இதனால் அவர்களது திருமணத்தை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இருந்தாலும் கீதாவும், சரவணனும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து உள்ளனர்.
இதே போல் அறை எடுத்து விடுதியில் தங்கி இருந்த போது சரவணனுக்கும், கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. கீதாவின் நடத்தையில் சரவணன் சந்தேகம் அடைந்து உள்ளார்.
நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரவணன், கீதாவின் முகத்தில் கையால் குத்தி தலையில் சுவற்றில் மோத செய்ததாக தெரிகிறது. இதில் பரிதாபமாக கீதா இறந்து உள்ளார்.
சரவணனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் தங்கும் விடுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.