தமிழகம்

கொலையில் முடிந்த இறுதிச்சடங்கு… இருதரப்புக்கு இடையே நிகழ்ந்த மோதல் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

இறுதிச்சடங்களில் இருதரப்புக்கு ஏற்பட்ட மோதலில் முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி, 70 வயதான இவர் இயற்கை மரணம் அடைந்த நிலையில், அவரது உடலை இடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு முன்பு அவரது உறவினர்கள் நீர்மலைக்கு செம்புதண்ணீர் எடுக்க சென்றுள்ளனர்.

அப்போது, நீர்மலைக்கு செல்லும் இடத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பினருக்கும், உயிரிழந்த சமுத்திரபாண்டியின் உறவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வேலுச்சாமி (வயது 60) என்பவர் தலையில் ஒருவர் கட்டையால் தாக்குதல் நடத்தவே காயமடைந்த அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருதரப்பினருக்கும் இடையே மேலும் பிரச்சினை ஏற்படாத வகையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

1 hour ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

2 hours ago

This website uses cookies.