Categories: தமிழகம்

உயிரை காவு வாங்கிய கிரிக்கெட் விளையாட்டு.. பெற்ற ஒரு மகனையும் இழந்த பெற்றோர்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

உயிரை காவு வாங்கிய கிரிக்கெட் விளையாட்டு.. பெற்ற ஒரு மகனையும் இழந்த பெற்றோர்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மணவாளன் பேட்டை காலனி தெருவை சேர்ந்த தேவேந்திரன்- சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள் மற்றும் 20 வயதுடைய ஒரே மகன் அஜித் குமார் உள்ளனர்.

இந்த நிலையில் அஜித்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் உமா தம்பதியரின் 15 வயது மகன் பிரபாகரன் உள்ளிட்ட நண்பர்களுடன் அருகே உள்ள வயல்வெளியில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர்.

அப்பொழுது விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பிரபாகரன் கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்திய சவுக்கு மரத்தில் ஆன ஸ்டெம்ப்பால் அஜித் குமாரின் நெற்றி பொட்டில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் மயங்கி விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அஜித் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர்.அப்பொழுது அஜித்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர் அஜித் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அஜித்குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: கட்சிக்கு தொடர்பில்லை என சொல்லி தப்பிக்க முடியாது : சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்கணும்.. வானதி சீனிவாசன்!

அஜித் குமாரின் உடன் பிறந்த சகோதரிகள் மூவருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில்.. மற்ற மூன்று சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை.. ஒரே ஆண் மகனான அஜித்குமார் இறந்ததில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.