Categories: தமிழகம்

லாரி ஓட்டுநரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பல் : சிசிடிவிவை வைத்து சேஸ் செய்த போலீஸ்.!!

வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணாட்சி (எ) முத்துகிருஷ்ணன் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார் கடந்த 22-ஆம் தேதி காலை லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சத்துவாச்சாரி நோக்கி வந்து கொண்டிருந்தார்

இந்த நிலையில் சத்துவாச்சாரி ஆவின் அருகே சர்வீஸ் சாலை வந்த போது லாரி பழுதானது இதனால் லாரியை முத்துகிருஷ்ணன் அருகே உள்ள மெக்கானிக் ஷாப் அருகில் நிறுத்தியுள்ளார் பின்னர் அவரும் கிளினரும் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர் அப்பொழுது அதே சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென முத்துக்கிருஷ்ணனை சுற்றி வளைத்து சராமாரியாக கத்தியால் வெட்டியது.

இதில் தலையிலும் கைகளிலும் வெட்டுப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் கைவிரல்கள் துண்டானது அதே நேரத்தில் தாக்குதலை நடத்திய கும்பல் மின்னல் வேகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதே ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர்

இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்து கீழே சாய்ந்த முத்துகிருஷ்ணனை உடனடியாக அங்கு இருந்து அவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கைகளில் பட்டாக்கத்தியுடன் வந்து லாரி ஓட்டுநரை பட்டாகத்திகளுடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திது

இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் ஏரியூரை சேர்ந்த சக்திவேல்,
மணிகண்டன், அசோக், ஆகிய மூன்று பேரையும் கைது கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில் சக்திவேலின் உறவினர் ஒருவரை முத்துகிருஷ்ணன் மற்றும் அவர்களின் தரப்பினர் தாக்கியுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தரப்பினர் முத்துகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது

மேலும் படிக்க: கூகுள் மேப்பை பார்த்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்த 4 பேர்..நூலிழையில் உயிர் தப்பியது!

மேலும் சில நாட்களுக்கு முன்பு நடந்த திரௌபதி அம்மன் திருவிழாவில் ஏற்பட்ட இருதரப்பு பிரச்சனையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

1 day ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

1 day ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.