இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல்.. கத்தியை காட்டி மிரட்டல்.. சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!
சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மது போதையில் இளைஞர்கள் சுக்குநூறாக அடித்து கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடாம்பாக்கம் சுபேதர் கார்டன், வரதராஜபேட்டை மற்றும் டிரஸ்ட் புரத்தில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை அடித்த நொறுக்கிய போது அதே பகுதியை சேர்ந்த ரியாசுதீடன, முருகலிங்கம், இம்ரான், ஆசைபாண்டி உள்ளிட்ட 5 பேர் தட்டிக்கேட்டுள்ளனர்.
ஆனால் அந்த மதுபோதை கும்பல் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்த மாவுக்கடை மற்றும் மளிகை கடைகளுக்குள் புகுந்து சூறையாடி மாமூல் கேட்டு மிரட்டி, தாமஸ் என்பவரை கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்ததும் அந்த கும்பல் தப்பியது. இதில் காயமடைந்த தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: முடியல…என்ன பண்ணாலும் கேட் போடறாங்களே… டிடிஎப் வாசனுக்கு மீண்டும் செக் வைத்த போலீஸ்..!
பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வரதராஜபேட்டையை சேர்ந்த குகன் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேர் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.