திண்டுக்கல் அருகே மாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 29 ), இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
முனீஸ்வரன் மீது திண்டுக்கல் நகர் வடக்கு திண்டுக்கல் திண்டுக்கல் தாலுகா உள்ளிட்ட காவல் நிலையங்களில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் முனீஸ்வரன் வீட்டில் இன்று மாலை நேரத்தில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முனீஸ்வரனை சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கைரேகை மற்றும் தடயறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த பொருட்களில் தடயங்களில் சேகரித்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும் கொள்ளையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.