Categories: தமிழகம்

கஞ்சா வியாபாரியாக மாறிய கறிவேப்பிலை வியாபாரி : மனம் திருந்தி வாழ்வதாக போலீசாரிடம் குமுறுல்.. ஆறுதல் கூறிய எஸ்பி!!

கஞ்சா வியாபாரம் மூலம் பணம் வருவதைக் காட்டிலும் பாவத்தை தான் நாம் சம்பாதிக்கிறோம், இதனால் பெற்றதை காட்டிலும் இழந்ததே அதிகம் மனம் திருந்திய கஞ்சா வியாபாரியின் மனக்குமுறல்.

வேலூர் தொரப்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவருக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர். மார்கெட்டில் கருவேப்பிலை வியாபாரம் செய்து வந்த இவருக்கு ஏற்பட்ட தகாத சேர்க்கையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா வியாபாரத்தில் இறங்கியுள்ளார்.

இடையில் கைதாகி சிறை சென்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திரன் தான் மனம் திருந்தி வாழ்வதாகவும், எனது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் இன்று வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணணிடம் நேரில் முறையிட்டுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட எஸ்.பி மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்து ராஜேந்திரன் வாழ்வாதாரத்துக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் கஞ்சா வியாபாரிகள் கள்ள சாராய வியாபாரிகள் தங்களின் தொழில்களை விட்டு மனம் திருந்தி வாழ விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என்றும் எஸ்பி தெரிவித்தார்.

மேலும் தான் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட போது சந்தித்த இன்னல்களை ராஜேந்திரன் கூறுகையில், நான் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட போது எனது மனைவி பிள்ளைகள் என்னிடம் பேசவில்லை, அவர்களுக்கு சமுதாயத்தில் அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

இதனால் பணம் வருவதை காட்டிலும் பலரின் பாவத்தையே அதிகமாக சம்பாதித்துள்ளோம். இதனால் பெற்றதை காட்டிலும் இழந்ததே எனக்கு அதிகம்.

மேலும் கஞ்சாவால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்களின் வாழ்க்கை அழிந்துள்ளது. இத்தகைய தீமையை இனியும் யாரேனும் செய்ய வேண்டாம்.
பலர்படும் துன்பத்தை நான் கண்ணால் பார்த்துள்ளேன் என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

11 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

11 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

12 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

12 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

13 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

13 hours ago

This website uses cookies.