பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு அருகே உள்ள, வட்டவன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது அலக்கட்டு கிராமம்.
இந்த கிராமம் பிற கிராமங்களுடன் தொடர்பில்லாமல் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் உள்ளது. இதில் எட்டு கிலோமீட்டர் தூரம் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இங்கு முப்பதுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, இக் கிராமத்தைச் சேர்ந்த ருத்ரப்பா சிவலிங்கி அவர்களின் இளைய மகள் கஸ்தூரி (வயது 14) என்பவரை விஷப்பாம்பு தீண்டி விட்டது. அவரைக் காப்பாற்ற தூரி கட்டி அப்பகுதி இளைஞர்கள், எட்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றனர். அதன் பிறகு சாலை வசதி இருப்பதால் அங்கே ஆட்டோ மூலம் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, முதல் உதவி சிகிச்சைக்கு அனுமதிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படியுங்க: ராகவா லாரன்ஸ் எனக்குத் தெரியும்.. மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கியது எப்படி?
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். சாலை வசதி இல்லாமல் இத்தகைய நவீன காலத்திலும், தூரி கட்டி பாம்பு கடித்த சிறுமியை எட்டு கிலோமீட்டர் தூரம் சுமந்து செல்லும் அவலம், இன்றும் தொடர்கதையாக உள்ளது.
சாலை வசதி இல்லாததால் தான், இச்சிறுமி கடந்த ஆண்டு, எட்டாம் வகுப்புடன் தனது பள்ளி படிப்பை நிறுத்திக் கொண்டார். அதிக தாமதமாவதால், பாம்பு கடித்த சிறுமி உயிர் பிழைப்பாரா?, என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.