கடந்த சில தினங்களாக திண்டுக்கல் நகரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனை அடுத்து இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது இதன் காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை பெய்து கொண்டிருந்த பொழுது திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் மதுரையிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து பயணிகளுடன் நடுரோட்டில் நின்று விட்டது.
பேருந்தில் செல்ப் எடுக்காத காரணத்தினால் என்ன செய்வது என்று ஓட்டுநரும் நடத்துநரும் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால் கொட்டும் மழையில் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் வேறு வழியின்றி போக்குவரத்து சார்பு ஆய்வாளர் உட்பட மூன்று காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மழையில் நனைந்தபடியே ஏலேலோ ஐலசா , தள்ளு, தள்ளு, தள்ளு என வண்டியை தள்ளியபோதும் அரசு பேருந்து ஸ்டாட் ஆகவில்லை.
15 நிமிட போரட்டத்திற்கு பிறகு கொட்டும் மழையில் நனைந்து கொண்டு அரசு பேருந்தை ஓரமாய் நிறுத்தினர். பின்னர் பேருந்தில் பயணம் செய்து வந்த பயணிகளை மற்றொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்த மூன்று போக்குவரத்து காவலர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
This website uses cookies.