ஆட்சியர் அலுவலகத்திற்கு வழக்கம் போல் பணிக்கு வந்த அரசு ஓட்டுநர்.. திடீர் மயக்கம் : விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
28 மே 2024, 7:41 மணி
driver
Quick Share

ஆற்காடு அடுத்த ஒழலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35) இவரது மனைவி சந்தியா(29) இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இவர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்ட இயக்குனரின் அரசு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்

இந்நிலையில் இன்று வெங்கடேசன் வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பணியினை மேற்கொள்ள சென்றார் இந்த நிலையில் கழிப்பறைக்கு சென்ற வெங்கடேசன் அங்கு திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் அவரை மீட்டு அவரை காரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: தலித் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு.. 5 வருடங்களில் குடும்பத்தையே கொலை செய்த கும்பல்.. ஷாக் சம்பவம்!!

இதனை தொடர்ந்து அவரது உடல் கூறு ஆய்வுக்காக வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 433

    0

    0