ஈரோடு : சத்தியமங்கலம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்தை வழி மறித்து பேருந்து ஓட்டுனரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பண்ணாரி நோக்கி நேற்று மாலை சென்ற 5/10 என்ற அரசு பேருந்தை கந்தசாமி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.
பண்ணாரி செல்லும் சாலையில் உள்ள சமத்துவபுரம் என்ற பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கீழே இறங்குவதற்கு முன்பே திடீரென பேருந்தை டிரைவர் நகர்த்தியதால் குழந்தை கீழே விழுந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண், பேருந்து ஓட்டுநரிடம் இறங்குவதற்கு முன்பே ஏன் பேருந்தை எடுத்தீர்கள் என்று கேட்டபோது ஓட்டுனர் அந்தப்பெண்ணை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் பேருந்தை வழி மறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அலட்சியமாக பேருந்தை இயக்கி பெண்ணை ஒருமையில் பேசிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.