ஈரோடு : சத்தியமங்கலம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்தை வழி மறித்து பேருந்து ஓட்டுனரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பண்ணாரி நோக்கி நேற்று மாலை சென்ற 5/10 என்ற அரசு பேருந்தை கந்தசாமி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.
பண்ணாரி செல்லும் சாலையில் உள்ள சமத்துவபுரம் என்ற பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கீழே இறங்குவதற்கு முன்பே திடீரென பேருந்தை டிரைவர் நகர்த்தியதால் குழந்தை கீழே விழுந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண், பேருந்து ஓட்டுநரிடம் இறங்குவதற்கு முன்பே ஏன் பேருந்தை எடுத்தீர்கள் என்று கேட்டபோது ஓட்டுனர் அந்தப்பெண்ணை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் பேருந்தை வழி மறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அலட்சியமாக பேருந்தை இயக்கி பெண்ணை ஒருமையில் பேசிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.