Categories: தமிழகம்

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்த அரசு அதிகாரி : சிறு, குறு வியாபாரிகள் அதிருப்தி!!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் பூ, பழம், டீ உள்ளிட்ட பல்வேறு பொருள்களை 200-க்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறு குறு வியாபாரிகள் கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய தடைவிதித்ததுடன் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறும்படி நேற்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உதவியாளர் வேல் ராமகிருஷ்ணன் சிறு குறு வியாபாரம் செய்து வந்த மூதாட்டியை காலால் எட்டி உதைத்து பொருள்களை தட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி சிறு, குறு வியாபாரிகள், அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் இன்று நடைபெற்றது .

சமாதான கூட்டத்தில் கோவில் இணை ஆணையர் கார்த்திக் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் செல்போனை நோண்டி கொண்டிருந்தது வியாபாரிகளிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது..

வியாபாரிகளின் முக்கிய வாழ்வாதாரம் பிரச்சினைக்கு தீர்வு காண நடந்த கூட்டத்தில் கோவிலின் இணை ஆணையர் அலட்சியமாக செயல்பட்டது அங்கிருந்தவர்களை அலட்சியப்படுத்துவதாக இருந்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் சிறு, குறு வியாபாரிகள் வழக்கம் போல் வியாபாரத்தை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவெடுப்புக்கு வியாபாரிகள் வரவேற்று இனிப்பு வழங்கினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

2 minutes ago

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

18 minutes ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

35 minutes ago

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

1 hour ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

2 hours ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

2 hours ago

This website uses cookies.