Categories: தமிழகம்

தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை : விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு!!

திருச்சி : ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் அல்ல என திருச்சி விமான நிலையத்தல் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்ந்து தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வில்லை என்பதால் தான் அவர் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது. அதிகாரப்பூர்வமாக இன்னும் அவர் அனுப்பியதாக தெரியவில்லை.

இந்நிலையில் அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி விட்டார் என்பது போன்ற செய்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி. திமுகவின் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து இது குறித்து பேசியபோது எப்போது அனுப்புவேன் என்று சொல்ல இயலாது என கூறியதாக தகவல் தெரிகிறது.

இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அது இன்னும் அனுப்பவில்லை என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது. ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் அல்ல. சட்ட மசோதாவை பொறுத்தவரையில் குடியரசு தலைவருக்கு அனுப்ப கடமைப்பட்டவர். அவர் உடனே மசோதாக்களை அனுப்ப வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.

முதல்வர் ஆளுநருக்கு கட்டுப்பட்டவர் என்று தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் மக்களுக்குத்தான் கட்டுப்பட்டவர். ஆளுநர் ஒன்றிய அரசின் பிரதிநிதி.

அதனால் தான் திமுக ஆட்சி வந்தது முதல் ஆளுநர் பதவி தேவையில்லை என பேசி வந்திருக்கிறது. இப்போதும் அவர்கள் பேசி வேண்டிய நிலை ஏற்படுத்துகின்றனர்
என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

58 minutes ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

60 minutes ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

2 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

4 hours ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

4 hours ago

This website uses cookies.