ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.
தொடர்ந்து அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக பச்சை பெருமாள்புரம் கிராமத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் சுடுகாட்டில் குழி தோண்டி தொடர்ந்து அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவேல் மகன் மாரியப்பன் (45) என்பவர் பச்சை பெருமாள் புரம் சுடுகாடு அருகே விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சுடுகாட்டில் குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடையது எனக் கூறி அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக்கொண்டார்.
மேலும் கையில் கத்தியையும் வைத்துக்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்து அடக்கம் செய்வதற்காக வந்த உறவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வெளியே வருமாறு கூறியும் சுமார் 2 மணி நேரமாக மாரியப்பன் வெளியே வரவில்லை.
இது குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழிக்குள் படுத்து இருந்த மாரியப்பன் இடம் பேசி வெளியே வரவழைத்தனர்.
தொடர்ந்து விஏஓ மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி உள்ள இடத்தை சர்வே செய்து பார்த்தபோது அது சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் என தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் மாரியப்பனை சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து இறந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் தன்னுடைய நிலம் என குழிக்குள் இறங்கி படுத்த நபரால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.