Categories: தமிழகம்

சுடுகாட்டில் தோண்டப்பட்ட சவக்குழி… திடீரென குழியில் படுத்து போராட்டம் செய்த நபரால் பரபரப்பு!!!

ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.

தொடர்ந்து அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக பச்சை பெருமாள்புரம் கிராமத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் சுடுகாட்டில் குழி தோண்டி தொடர்ந்து அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவேல் மகன் மாரியப்பன் (45) என்பவர் பச்சை பெருமாள் புரம் சுடுகாடு அருகே விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சுடுகாட்டில் குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடையது எனக் கூறி அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக்கொண்டார்.

மேலும் கையில் கத்தியையும் வைத்துக்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்து அடக்கம் செய்வதற்காக வந்த உறவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வெளியே வருமாறு கூறியும் சுமார் 2 மணி நேரமாக மாரியப்பன் வெளியே வரவில்லை.
இது குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழிக்குள் படுத்து இருந்த மாரியப்பன் இடம் பேசி வெளியே வரவழைத்தனர்.
தொடர்ந்து விஏஓ மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி உள்ள இடத்தை சர்வே செய்து பார்த்தபோது அது சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் என தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் மாரியப்பனை சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து இறந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் தன்னுடைய நிலம் என குழிக்குள் இறங்கி படுத்த நபரால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.