திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரம் அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. அதே ஊரைச் சேர்ந்த குமார்-பிரீத்தா தம்பதியினரின் மகன் சசிகுமார் (13). அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறான். இந்நிலையில் நேற்று உடற்கல்வி வகுப்பில் விளையாடுவதற்காக அனுமதி பெற, பள்ளி தலைமையாசிரியர் லட்சுமணனிடம், சசிகுமார் உடன் மூன்று மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது தனது மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த தலைமையாசிரியர் மாணவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
மாணவர்களை அழைத்து போன் கூட பேச விட மாட்டீர்களா என கூறி அடித்துள்ளார். இதில் மற்ற மாணவர்கள் சிக்காமல் ஓடிவிட்டனர். சசிகுமார் மட்டும் சிக்கியதால் பிரம்பால் கைகள் முதுகு, வயிறு ஆகியவற்றால் அடித்துள்ளார். இதனால் இரு கைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிற்றிலும் முதுகிலும் அடித்ததால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்த நிலையில், பலத்த காயமடைந்த மாணவனை அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்துள்ளனர். இது சம்மந்தமாக மாணவன் சசிகுமாரின் பெற்றோர் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.