Categories: தமிழகம்

பூட்டி வைத்த வள்ளலார் மடத்தை உடைத்து கைப்பற்றிய இந்து அறநிலையத்துறை.. விழுப்புரத்தில் பரபரப்பு!!

நீதிமன்ற உத்தரவுப்ப்படி விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வள்ளலார் மடத்தின் பூட்டினை உடைத்து இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் முறைகேடு நடைபெறுவதாக சீனுவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கினை
விழுப்புரம் மண்டல இணை ஆணையர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டலம் இணை ஆணையர் சிவக்குமார் விசாரணை செய்ததில் கணக்கு வழக்குகள் சரியாக பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து விழுப்புரம் மண்டலம் இணை ஆணையர் நீதிமன்றம் சிவக்குமார் விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையை இந்து சமய நிலைத்துறை கீழ் கொண்டு வருவதாக உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் வழங்கி கையகப்படுத்துவதாக அறிவித்தனர்.

அதன்படி இன்று இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அறக்கட்டளை கைப்பற்ற சென்றபோது மடத்தினை பூட்டி சாவியை தராததால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதினா தலைமையிலான அதிகாரிகள் பூட்டினை உடைத்து இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டு வந்தனர். போலீசாரின் பாதுகாப்போடு மடத்தின் பூட்டினை உடைத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

9 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

10 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

11 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

11 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

11 hours ago

This website uses cookies.