Categories: தமிழகம்

பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… கோவை அருகே பயங்கரம்!!

பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… கோவை அருகே பயங்கரம்!!

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே கணியூர் பகுதியை சேர்ந்தவர் கணபதியப்பன். இவரது மனைவி பாப்பா (வயது 70). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கணபதியப்பன் பாப்பா மற்றும் மகள் கணியூர் சுங்கச்சாவடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்களது சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார்கள். கணபதியப்பன், அவரது மகள் வீடு கட்டுமான பணியை பார்ப்பதற்காக சென்றனர்.

அப்போது வீட்டில் மூதாட்டி பாப்பா மட்டும் தனியாக இருந்தார். மூதாட்டி கொலை இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கணபதியப்பன், அவரது மகள் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினர்.

அப்போது வீட்டில் தலையில் தாக்கப்பட்டு நிலையில் பாப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினரின் உதவியுடன் இதுகுறித்து உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து அடுத்து கொன்றது தெரியவந்தது.

ஆனால் மூதாட்டி பாப்பா அணிந்து இருந்த நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதனால் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்?, எதற்காக பாப்பாவை கொலை செய்தார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பிணமாக கடந்த மூதாட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!

சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…

13 minutes ago

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

14 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

15 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

16 hours ago

This website uses cookies.