திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தாளக்குடி ஊராட்சி சாய் நகரில் வாடகை வீட்டில் வசித்த வௌிமாநில லாட்டரி டிக்கெட் புரோக்கர் நரசிம்மராஜ் (வயது 37) தனது சொந்த வீட்டை விற்று அதில் கிடைத்த 28 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு செலவு செய்து வந்துள்ளார்.
இதனை அவரின் மனைவி சிவரஞ்சனி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மராஜ் கத்தியால் மனைவியை குத்தி கொலை செய்து, பிணத்தின் மீது மஞ்சள் துாள், மிளகாய் துாள் துாவி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு தனது தாய் வசந்தகுமாரி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திராவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது குழந்தைகளை விட்டு விட்டு தாயுடன் தலைமறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை பிடிப்பதற்கு 4 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆந்திர பகுதியில் அவர் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படையினர் ஆந்திராவில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பிணத்தை மறைத்து வைத்த தனது வீட்டின் நிலை என்ன என்பது குறித்து தொிந்து கொள்ள நோட்டமிடுவதற்காக சாய் நகருக்கு நரசிம்மராஜ் தனது தாயுடன் வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.