திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தாளக்குடி ஊராட்சி சாய் நகரில் வாடகை வீட்டில் வசித்த வௌிமாநில லாட்டரி டிக்கெட் புரோக்கர் நரசிம்மராஜ் (வயது 37) தனது சொந்த வீட்டை விற்று அதில் கிடைத்த 28 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு செலவு செய்து வந்துள்ளார்.
இதனை அவரின் மனைவி சிவரஞ்சனி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மராஜ் கத்தியால் மனைவியை குத்தி கொலை செய்து, பிணத்தின் மீது மஞ்சள் துாள், மிளகாய் துாள் துாவி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு தனது தாய் வசந்தகுமாரி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திராவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது குழந்தைகளை விட்டு விட்டு தாயுடன் தலைமறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை பிடிப்பதற்கு 4 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆந்திர பகுதியில் அவர் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படையினர் ஆந்திராவில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பிணத்தை மறைத்து வைத்த தனது வீட்டின் நிலை என்ன என்பது குறித்து தொிந்து கொள்ள நோட்டமிடுவதற்காக சாய் நகருக்கு நரசிம்மராஜ் தனது தாயுடன் வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
This website uses cookies.