தேனி மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் தேவாரம் கனரா வங்கியில் நகை அடகு வைக்க சென்றபோது, வங்கிக்குள்ளேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவரது கணவன் வெள்ளைச்சாமி பிரேமலதாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பிரேமலதாவுக்கு தேவாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேவாரம் காவல்துறையினர் தப்பி ஓடிய வெள்ளைச்சாமியை தேடி வருவதுடன், தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்ததாகவும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆத்திரத்தில் மனைவியை கணவன் வெட்டிவிட்டு தப்பி சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வங்கிக்குள் புகுந்து மனைவியை கணவன் வெட்டிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.