தேனி மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் தேவாரம் கனரா வங்கியில் நகை அடகு வைக்க சென்றபோது, வங்கிக்குள்ளேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவரது கணவன் வெள்ளைச்சாமி பிரேமலதாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பிரேமலதாவுக்கு தேவாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேவாரம் காவல்துறையினர் தப்பி ஓடிய வெள்ளைச்சாமியை தேடி வருவதுடன், தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்ததாகவும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆத்திரத்தில் மனைவியை கணவன் வெட்டிவிட்டு தப்பி சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வங்கிக்குள் புகுந்து மனைவியை கணவன் வெட்டிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.