காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் கணவரின் பெற்றோர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள நல்லப்பா நகர் 3வது வீதியில் குடியிருந்து வரும் ஹரிராஜ் (வயது 28) என்பவர் நர்மதா (வயது 28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் கொங்கு மெயின்ரோடு பகுதியில் குடியிருந்து வரும் நிலையில் கணவரின் பெற்றோர் தன்னை கொடுமை படுத்தி வருவதாகவும் ஆடி சீருக்கு நர்மதாவின் அம்மா வீட்டிற்கு சென்று அங்கேயே விட்டுவிட்டு ஹரிராஜ் வந்துவிட்டதாகவும் கணவரின் பெற்றோர் தன்னை வாழ விடாமல் கொடுமைப்படுத்துவதாகவும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நர்மதா புகார் அளித்துள்ளார்.
எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து பாண்டியன் நகரில் உள்ள ஹரிராஜ் பெற்றோர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து நர்மதா போராட்டத்தை கைவிட்டார்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.