சென்னை : ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் என்பவரின் மகன் வசந்தகுமார் (வயது 11).
5ம் வகுப்பு படித்து வரும் வசந்தகுமார், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடையில் ரோஸ்மில்க் வாங்கிக் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயக்கமுற்ற அவரை, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடைகாரர் பெத்ராஜ் என்பவரை விசாரித்த போது முருகானந்தம் என்பவர் வீட்டில் வைத்து தயாரிக்கும் ரோஸ் மில்க் கடைகளில் சப்ளை செய்வதாகவும் அதனைதான் அவரது மகன் குடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுவனின் தாயார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்ணகி நகர் போலீசார், சந்தேகமரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ரோஸ்மில்க்கின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிறுவனுக்கு சிறுவயதில் வலிப்பு நோய் உள்ளதாகவும், அதனால் உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.