திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார் 43 என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 12.05.2017 ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில் பேரளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்த நிலையில் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ராஜகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
மேலும் விசாரணை முடிந்து நீதிமன்ற குற்றவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நன்னிலம் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வழக்கின் தீர்ப்பில் ராஜகுமாருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கை உடனடியாக விசாரணை மேற்கொண்டு கைது செய்து குற்ற அறிக்கை தாக்கல் செய்த நீதிமன்ற விசாரணை முடித்து தண்டனை பெற்றுத் தந்த பேரளம் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்
மேலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளையும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளையும் விரைந்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.