திருவாரூர் தெற்கு வீதி பெயரினை டாக்டர் கலைஞர் சாலை என மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் நகராட்சியில்11.4.22 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் திருவாரூர் தெற்கு வீதியில் பெயரை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த செயலை தடுத்து நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், ஆழி தேரோடும் வீதிகள் பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் மாநில செயலாளர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
மாநில தலைவர் அண்ணாமலை கண்டன உரையாற்றிய போது, எதையாவது
தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் பல பாரதப் பிரதமர் மோடி அவர்கள் திட்டங்களில் அவர் பெயர் எதிலேயும் வைக்கப்படவில்லை.
திமுக கூட்டணி கட்சியினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் இலங்கையில் ஏற்பட்ட நிலைமை தமிழகத்திற்கும் வரும். பல கிராமங்களில் மக்கள் தார் சாலைகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அங்கே புதிய சாலைகளை அமைத்து கருணாநிதி சாலை என பெயர் வைக்கலாம். மனுநீதி சோழன் ஆண்ட மண். இந்த வீதிக்கு மனுநீதிசோழன் சாலை என பெயர் வைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்தனர்.
இந்தியாவில் முழுவதும் குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளது. 2024 தேர்தலில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குடும்ப அரசியலை ஒழித்து வருகிறார். 2024 தேர்தல் கோபாலபுரத்துக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என பேசினார்.
மேலும் திருவாரூர் தெற்கு வீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று வைக்க மாட்டோம் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்படி வைத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செயல்படவிடாமல் மாவட்டம் மாவட்டமாக வந்து போராட்டங்கள் நடத்துவோம் என மாநிலத் தலைவர் அண்ணாமலைப் கண்டன உரையாற்றினார்.
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…
சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…
கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…
This website uses cookies.