கன்னியாகுமரி : கடியப்பட்டணத்தில் 1 1/2 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன் தன் தங்கையை மடியில் வைத்து புன் சிரிப்போடு கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போர் கண்களை குளமாக்கி வருகிறது
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா 4-வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி கடந்த 21-ம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த நிலையில் அந்த சிறுவனை ஒன்றரை சவரன் நகைக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்த நிலையில் பாத்திமா மற்றும் அவரது கணவர் சரோபியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுவனின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், தற்போது அந்த நான்கு வயது சிறுவன் ஜோகன் ரிஷி தனது தங்கையான கைக்குழந்தையை மடியில் வைத்து பிஞ்சு புன் சிரிப்புடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.